ஆம்பன் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
ஆம்பன் புயல்:
நேற்றிரவு மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்தது ஆம்பன் புயல். இதனால் மணிக்கு 150 முதல் 160 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் பெய்த கனத்த மழையால் கொல்கத்தா விமான நிலையம் மழை நீரால் நிறைந்தது. கொல்கத்தா மற்றும் பல நகரங்களில் வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்த காரணத்தால் மின்தடை ஏற்பட்டது. தெருக்களில் மழை நீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும் கிடக்கிறது.
புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேலும் ஒரு லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |