பொதுமக்களுக்கு, உணவு பொருட்களை டெலிவரி செய்து வரும் அமேசான் ஃபுட் நிறுவனம், வருகிற டிசம்பர் 29 முதல் தங்கள் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
திடீர் நிறுத்தம் :
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில், மருந்து முதல் சாப்பாடு வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் வாயிலாகவே கிடைக்கிறது. அதுவும் குறிப்பாக ஸ்விகி, zomato மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் பயனர்களுக்கு தேவைப்படும் பொருட்களை, அவர்கள் ஆர்டரின் பெயரில் ஹோம் டெலிவரி செய்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த கோவிட் 19 காலகட்டத்தின் போது இந்த உணவு நிறுவனங்களின் சேவை, வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த நிலையில், உணவு சேவையை, வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக செய்து வரும் அமேசான் ஃபுட் நிறுவனம், தங்கள் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
வருகிற டிசம்பர் 29ஆம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தின் சார்பாக, உணவு டெலிவரி செய்யப்படாது என அறிவித்துள்ளது. இதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பிரபல உணவு நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு, அவர்களது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.