முன்னணி ஐடி நிறுவனமான அமேசானில் இருந்து இந்த ஆண்டு 18,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.
வெளியான அறிவிப்பு:
உலகின் முன்னணி ஐடி நிறுவனமான amazon இல் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தில், கடந்தாண்டு சுமார் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆன்ட்டி ஜாஸ்ஸி கூறியிருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுபோக அமேசானில், உள்ள சேல்ஸ் பிரிவிலிருந்து 10%க்கும் குறைவான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அதன் அதிகாரி மார்க் பெனியோ அறிவித்திருந்தார். இது போன்று, ஊழியர் குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்றை அமேசான் அறிவித்துள்ளது.
அதாவது இந்த மாத இறுதியில், நிறுவனத்தில் இருந்து 18,000 க்கு மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. amazon நிறுவனத்தின், இந்த திடீர் அறிவிப்பு ஐடி ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.