சன் டிவியில் ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியல் விரைவில் துவங்க உள்ள நிலையில், இவருடன் ராஜா ராணி பிரபலம் புது சீரியலில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
புது சீரியல்:
சன் டிவி ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல், வரும் வாரத்தில் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சீரியலை தொடர்ந்து, ஆலியா மானசா நடிக்கும் இனியா என்ற புதிய சீரியல் இதே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஆலியா மானசாவுடன், ராஜா ராணி 2 சீரியல் பிரபலம் பிரவீனா இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர் ஏற்கனவே இந்த சீரியலில், சந்தியா பாத்திரத்தில் நடித்த ஆல்யா மானசாவுக்கு மாமியாராக சிவகாமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் இந்த காம்போ இனியா சீரியலிலும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீனா அவர்கள் இந்த சீரியலில் என்ன ரோலில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அறிவிப்பு தற்போது ஆலியா மானசா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராஜா ராணி சீரியலில் ஆலியா மனசாவை சிவகாமி கொஞ்ச நஞ்சமா பாடுப்படுத்தினார். இந்த சீரியலில் அவரது நிலைமை எப்படி இருக்க போகிறதோ என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.