பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.
15 நாள் குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்ணேன்:
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். 38 வயதான நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 28-ம் தேதி கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலில் இருந்தார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ் என வந்தது. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கொரோனா பரவாமல் தடுக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் “எனக்கு இப்போது நெகட்டிவ்” என்று உற்சாகத்தில் கத்தி குழந்தைகளை கட்டி அணைக்கும் நெகிழ்ச்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.