சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்., இந்த அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி?? அலைமோதும் கூட்டம்!!!

0
சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்., இந்த அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி?? அலைமோதும் கூட்டம்!!!
சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்., இந்த அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி?? அலைமோதும் கூட்டம்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வானிலை குளிர்ந்து வருவதால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேற்கு தொடர்ச்சி மலையில் நீண்ட நேரமாக பெய்த கனமழையால் அப்பகுதிகளை சேர்ந்த நீர்நிலைகள் அதிவிரைவாக நிரம்பி வந்தது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் குற்றாலத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு தேதி வெளியீடு., வெளியான முக்கிய தகவல்!!!

இந்நிலையில் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்து வருவதால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே சுற்றுலா பயணி உள்ளிட்ட அப்பகுதி மக்களும் அருவிகளில் குளிக்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here