ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்கள் போரட்டம் நடத்திவருகின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்:
கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பொதுவான அறுவை சிகிச்சை, பல் மற்றும் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்டவற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆயுர்வேத மருத்துவத்தில் ஷால்யா (பொது அறுவை சிகிச்சை), ஷாலக்யா (காது, மூக்கு, தொண்டை, இஎன்ஜி, கண், கழுத்து, பல்) உள்ளிட்டவற்றுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோபதி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அவர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினர். அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
கண்ணமூச்சி ஆடும் தங்கத்தின் விலை – இன்று நகை வாங்கலாமா? வேண்டாமா?
இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உயிர்காக்கும் சிகிச்சைகள் தவிர வேறு எந்த சிகிச்சையும் அளிக்கப்போவதில்லை என் முடிவு செய்த்துள்ளனர். மத்திய அரசு தன் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.