கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுராந்தகத்தில் இன்று முதல் ஜூலை 19ம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் பொதுநல சங்கம் அறிவித்து உள்ளது.
கடைகள் அடைப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களிலும் தீவிரமெடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் 14ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை – தமிழக அரசு உத்தரவு..!
இந்நிலையில் மதுராந்தகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் இன்று முதல் 7 நாட்களுக்கு அதாவது ஜூலை 19ம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் பொதுநல சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.