சன் தொலைக்காட்சியின் இனியா சீரியல் கல்யாணம் எபிசோடுகளை மையமாக வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இனியாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இப்படி இருக்க இப்பொழுது ஆலியா மற்றும் சஞ்சீவ் இடையே இந்த திருமணம் குறித்து தரமான சம்பவம் நடந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆலியாவை பார்ப்பதற்காக சஞ்சீவ் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ஆலியா வாங்க அண்ணா என கூறியுள்ளார். அதைக் கேட்டு ஷாக் ஆன சஞ்சீவ் ”என்னது அண்ணாவா” என்று அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆமாம் எனக்கு சீரியலில் மற்றொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. அதனால் தான் உங்களை நான் அண்ணா என சொல்கிறேன். இதைக் கேட்டு மிகப்பெரிய ஷாக்கிங்கில் இருந்து வந்த சஞ்சீவிடம், சாரி சும்மா உங்க possesive-வை சோதித்து பார்ப்பதற்கு தான் நான் இப்படி கூறினேன் என சொல்லியுள்ளார்.
ஏலே இசுக்கு.., திமிரு பட ஈஸ்வரி கணவர் குழந்தையுடன் இருக்கும் அழகிய கிளிக்.., இணையத்தில் வைரல்!!
மேலும் இருவரும் காதலித்து பல கடினமான சூழ்நிலையை தாண்டி திருமணம் செய்து கொண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையாக எனக்கு நீங்க அண்ணன் மட்டும் இல்ல அம்மா, அப்பா, குழந்தை, இன்னும் எல்லாமே எனக்கு நீங்க தான் என்று ஒரு உருக்கமான பதிலை கொடுத்து சஞ்சீவை காதல் மழையில் நனைய வைத்துள்ளார் ஆலியா.