சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவ்வாக இருந்து வருபவர் சீரியல் நடிகை ஆலியா மனசா. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற பட்டு உடுத்தி, நகைகளை போட்டு கொண்டு ஒரு கல்யாண பெண் தோற்றத்தில் காட்சி தருகிறார். அவரின் இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட சீரியல் ராஜா ராணி சீசன் 1 சீரியல். அதன் சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் அமர்ந்தவர் நடிகை ஆலியா மனசா. இவர் ஒரு மாடலாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தொகுப்பாளினி, நடன கலைஞர் என தனது பயணத்தை விரிவுபடுத்தினார். இருப்பினும் அவரின் பெயர் அறிய வைத்தது ராஜா ராணி சீசன் 1 சீரியல் தான்.
மேலும் அவர் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவர் அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் படித்த மருமகளை வெறுக்கும் மாமியாருக்கு நன்கு படித்த சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் லூட்டிகளை வீடியோவாக மற்றும் புகைப்படமாக ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை மற்றும் சிவப்பு நிற பட்டு புடவையில் நகைகளுடன் ஒரு மணப்பெண் கோலத்தில் தோற்றமளிக்கிறார். இணையத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் சில நிமிடங்களுக்கு உள்ளாக எக்கசக்க லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்