உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்துள்ள நிலையில், அபி சித்தர் என்ற வீரர் முதல் பரிசாக காரை தட்டி சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையைச் சுற்றிய பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலான இன்று உலகப்புகழ் பெற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை துவக்கி வைக்க, அமைச்சர் உதயநிதி நேரில் வந்திருந்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 10 சுற்றுகளாக நடத்தப்பட்டு 823 காளைகள், விழா கமிட்டியினரால் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டது. இதில் 26 காளைகளை பிடித்து, அபி சித்தர் என்ற வீரர் முதல்வரின் கார் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து 20 காளைகளை அடக்கிய அஜய் 2ம் பரிசையும், 12 காளைகளை அடக்கிய ரஞ்சித் 3ம் பரிசையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, மாட்டை அடக்கிய காளையர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் அமைச்சர் வழங்கிய தங்க காசு மற்றும் வெள்ளி காசு உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் என வழங்கப்பட்டுள்ளது.