கிளுகிளுப்பான டைட்டிலுடன் வருகிறது விஜய்யின் அடுத்த படம்…படத்தில் நான்கு ஹீரோயின்களா???

0

தரமான படங்களை மிக குறைந்த காலகட்டத்திற்குள் குறைந்த பட்ஜெட்டில்  இயக்குபவர் இயக்குனர் ஏ எல் விஜய். அந்த வகையில் தற்போது 4 ஹீரோயின்களை  வைத்து குறைந்த நேரத்தில் ஒரு படத்தை இயக்கி முடித்து உள்ளார். கங்கனாரனாவத் வைத்து அவர் இயக்கிய “தலைவி” படத்தை தொடர்ந்து அவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இயக்குனர் ஏ.எல். விஜய்-யின் படங்கள் வசூல் சாதனை குவிக்கா விட்டாலும் அவரது படங்கள் ஓரளவு வெற்றி அடைந்துவிடும். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் வகையில் அவர் படங்கள் இருக்கும். இதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. மேலும் தற்போது அவர்  இயக்கிய ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் “தலைவி” திரைப்படம் 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனிடையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஆகியோர் வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்து உள்ளராம் ஏ.எல். விஜய். அந்த படத்திற்கு “அக்டோபர் 31-லேடீஸ் நைட்” என்ற அட்டகாசமான பெயர் ஒன்றையும் வைத்து உள்ளாராம். மேலும் இந்த படத்தை அவர் வெறும் ஒரு மாத காலத்திற்குள் எடுத்து முடித்துவிட்டாராம். இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகியுள்ளதாகவும்,இது ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here