பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார்.
கோலிவுட்டில் விஜய், அஜித் போல இந்தி சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் அக்ஷய் குமார். 1991 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக பாலிவுட்டில் வலம் வருபவர் இவர். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சியமானவர் தான். அதாவது பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2.0 திரைப்படத்தில் பக்ஷிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
அதன் பிறகு முழுவதும் பாலிவுட் பக்கமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பொதுவாக இவர் நடிக்கும் பயோ பிக் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். இந்நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி தனது தாயார் அருணா பாட்டியா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். மேலும் அவருக்காக பிராத்தனை செய்துகொள்ளும் படியும் தன் ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவரது தாயார் இன்று இறந்துள்ளார். இந்த இறப்பு செய்தியையும் அக்ஷய் குமார் பதிவு செய்துள்ளார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தற்போது தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்