வாலிபட ரீமேக்கில் போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

அஜித் குமார் நடித்து வெளியான வாலி திரைப்படம் ரீமேக் தொடர்பான போனி கபூருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

எஸ்,ஜே. சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலி. மேலும் இந்த படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்து இருப்பார். இவர்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்து இருப்பார். இந்த படம் நல்ல வெற்றியை தந்தது.

இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருந்தார். ஆனால் sj.சூர்யா இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை விடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நிதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு போனி கபூருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க பட்டு அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதே போல தான் 2017 ஆம் ஆண்டு “ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா தொடுத்த வழக்கில் , “படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் ரீமேக் செய்யும் உரிமை இயக்குநர்க்கு மட்டுமே உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் தான் எஸ்.ஜே.சூர்யா உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. அதாவது ரீமேக் சார்ந்த உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளரிடம் உள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து உரிமையைப் பெற்ற போனி கபூர், வாலி படத்தை ரீமேக் செய்யலாம் எனவும், ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here