எஸ்.பி.பி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காத அஜித் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
spb and ajith
spb and ajith

தமிழ் திரையுலகம் தற்போது பல இழப்புகளை சந்தித்து வருகிறது. இதை விட தற்போது எஸ்.பி.பி அவர்களின் இழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரபல நடிகரான அஜித் எஸ்.பி.பிக்கு எந்த இரங்கல் செய்திகளையும் தெரிவிக்கவில்லை.

எஸ்.பி.பி

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் பின்னணி பாடகராக இருந்திருக்கிறார் எஸ்.பி.பி. இவரின் பாடலுக்கு மயங்காத ஆட்களே கிடையாது. இவரின் இனிமையான குரலின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். 1966 இல் இவர் தனது முதல் பாடலை பாடியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

spb
spb

இவர் அதிக பாடல்களை பாடியதற்கான கின்னஸ் விருதும் பெற்றிருக்கிறார். கடந்த மாதம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறி வந்தனர். அவரது மகனான சரண் எஸ்.பி.பி உடல்நலம் பற்றிய தகவலை தினமும் அறிவித்து வந்தார்.

vijay
vijay

இந்நிலையில் அவர் உயிரிழந்தது  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னணி நடிகரான விஜயும் எஸ்.பி.பியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

spb
spb

ஆனால் அஜித், எஸ்.பி.பி இறந்ததற்கான எந்த இரங்கல் செய்தியும் இது வரையிலும் தெரிவிக்கவில்லை. எஸ்.பி.பி மூலமே சினிமாவில் அஜித் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.பி இவர்களின் திரைப்படங்களுக்கு பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால் இது வரையில் அவர் எந்த இரங்கல் அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here