ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தங்கை சௌந்தர்யாவின் மகன் பிறந்தநாளுக்கு, போட்டோவுடன் போட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் பாராட்டை பெற்றுள்ளது.
ரசிகர்கள் பாராட்டு :
நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின், ஐஸ்வர்யா தனது சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோக யோகா, ஃபிட்னஸ் என தொடர்ந்து, தன் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தனது தங்கை சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று, அவரது புகைப்படத்துடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, குழந்தையின் போட்டோவை பதிவிட்டு அதன் கேப்ஷனில், தன்னை பெரியம்மா என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், தலைவர் தன் பிள்ளைகளுக்கு தமிழை நன்றாக சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார். அதனால் தான், ஐஸ்வர்யா தன்னை பெரியம்மா என குறிப்பிட்டுள்ளார் என பாராட்டி வருகின்றனர். மேலும், ஊருக்காக நீங்கள் உங்கள் சுயத்தை இழந்து வாழாதீர்கள், உங்களுக்காக வாழுங்கள் அதான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். அவரின், இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy happy birthday my darling doll ! Ved Kutti…Perima loves you so so much ! God bless you my lil kups??? pic.twitter.com/mWzfZdf0W0
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 6, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்