நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினி, தன் இன்ஸ்டா பக்கத்தில் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டேன் என கூறி முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வைரல் பதிவு:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த வருடம், விவாகரத்து பெற்று பிரியப் போவதாக தனித்தனியே அறிவித்தனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரவர் சினிமா கெரியரில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்.
காதலனை ரகசிய திருமணம் செய்த பிரபல பாலிவுட் நடிகை.., இணையத்தில் கசிந்த புகைப்படம்!!
நடிகர் தனுஷ் வாத்தி பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளார். அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படம் இயக்கும் வேலைகளை துவக்கியுள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ உள்ளதாக கடந்த சில நாட்களாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினி தன் இன்ஸ்டா பக்கத்தில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு, தென்னிந்திய ஸ்டைலில் தயாராகி விட்டேன் எனக்கூறி தன் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், தனுசை பிரிந்த அந்த ஏக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி கொண்டாட்டத்துக்கு தயாராகிட்டீங்களே? என்ன ஐஸ்வர்யா இதெல்லாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
View this post on Instagram