தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தன்னை பற்றி வலம் வரும் வதந்தி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. அதன் பிறகு சன் டிவியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தில் கொஞ்சம் சீனுக்கு வந்தாலும் மக்கள் மனதில் பதியும் படி நடித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். காக்க முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு இவருக்கு விருதும் கிடைத்தது. தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.
‘நானும் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்’ – மனம் திறக்கும் சமந்தா!!
தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பல படங்கள் வெளிவராமல் நிலுவையில் உள்ளது. இப்படி இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த படம் செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஐஸ்வர்யா பேட்டியளித்துள்ளார். அதாவது தான் இந்த படத்தில் நடிக்கவில்லை. வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.