தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் கூடிய விரைவில் விமான சேவை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமான சேவை
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில், பேருந்து போக்குவரத்து துறையை அதிகம் விரும்பினாலும் விமான சேவை எளிதான பயணமாக இருப்பதால் இந்த சேவையையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக விமான துறையும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் விமான போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது.
இது தான் ட்ரைலர்.., இவ்ளோ தான் டைமிங்.., PS2 படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு!!!
இந்நிலையில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களிலும் விமான சேவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உடான் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் விமான சேவை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.