தலைநகர் டெல்லியில் காற்று மிகவும் மாசடைந்துள்ளதால் இதை தடுக்க மாநில காற்று தர மேலாண்மை ஆணையம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
காற்று மாசுபாடு:
கொரோனா காலகட்டத்தின் போது, விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது பாதியாக குறைந்திருந்தது. இந்த நிலையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் சமீப நாட்களாக, காற்றின் மாசின் அளவு கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இதனை தடுக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முக்கிய பகுதிகளில் கட்டுமான பணி, வாகனங்கள் அதிகரிப்பு போன்றவையால் காற்றின் தரம் மோசமான அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. இதனால், காற்றின் தர மேலாண்மை ஆணையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
என்ன பிக் பாஸ்., முதல் நாளே ஆரம்பிச்சாச்சா? இந்த வாரம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல!!
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் மூன்றாவது நிலையான கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதில் மெட்ரோ ரயில், விமான நிலையம், தேசிய பாதுகாப்பு, மருந்து தயாரிக்கும் நிறுவனம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு விலக்கு உண்டு. கட்டுமான இடிப்பு, பாதைகள் சீரமைப்பு, செங்கல் சூளை போன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.