நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) அறிவித்து உள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை அரசு எடுத்தது. இந்நிலையில் நாடு முழுவதும் பல லட்சம் இறுதியாண்டு மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அவர்கள் பட்டம் பெற தாமதமாகும் என்பதால் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் 25% உயர்வு – கேரள அரசு அதிரடி உத்தரவு..!
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்திருக்க வேண்டும் என AICTE உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க வேண்டும் என AICTE அறிவித்து உள்ளது.