அரசு ஊழியர்களே., மீண்டும் 4% அகவிலைப்படி மட்டுமல்ல ஊதிய உயர்வும் கூட? வெளியான தகவல்!!!

0
அரசு ஊழியர்களே., மீண்டும் 4% அகவிலைப்படி மட்டுமல்ல ஊதிய உயர்வும் கூட? வெளியான தகவல்!!!
அரசு ஊழியர்களே., மீண்டும் 4% அகவிலைப்படி மட்டுமல்ல ஊதிய உயர்வும் கூட? வெளியான தகவல்!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதன்மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயனடைந்தனர். மீண்டும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்படும் என AICPI குறியீடு தகவல் தெரிவித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த குறியீட்டின் படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் மே 31ம் தேதி மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் AICPI குறியீடு எண் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டு பெரிய அளவில் ஊதியம் வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஜனவரியில் மீண்டும் 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது.

இரண்டு ஆண்டுக்கு முன் வரலட்சுமி செய்த காரியம்.., மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா.., நடந்தது என்ன?

இப்படி அகவிலைப்படி 50% வந்தால், அது பூஜ்ஜியமாக்கப்பட்டு அந்த தொகையை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். இதனால் 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெருமளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் நினைவில் கொள்ள வேண்டிய விவரம் என்னவென்றால், இனி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் அதே தேதிகளில் உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here