‘உங்ககிட்ட நிலம் இருந்த சொல்லாதீங்க ஸ்டாலின் எடுத்துக்குவாரு’ – இபிஎஸ் மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிட்டிங்களா??

0

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக கட்சியின் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் ந1டைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தங்களது பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக பிரச்சாரத்தில் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் மாத்தி மாத்தி விமர்சித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது, விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் வரும் என்று தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை விமர்சித்த முதல்வர், திமுக பிரச்சாரத்தின் பொழுது இது செய்வேன் அது செய்வேன் என்று தான் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது என்ன தான் செய்தார்கள்.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – ராகுல் அசத்தல் சதம்!திணறும் இங்கிலாந்து!!

ஆனால் அதிமுக பிரச்சாரத்தில் நாங்கள் செய்ததை சொல்கிறோம். மேலும் உங்களிடம் சொந்தமாக இடம் இருந்தால் அதனை திமுகவிடம் கூறிவிடாதீர்கள். அதனை அவர்கள் அபகரித்து விடுவார்கள். திமுக ஆட்சியில் சட்டாவிரோதமாக கைப்பற்றப்பட்ட 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அம்மா அரசு தான் திரும்ப மக்களிடம் கொடுத்தது. மேலும் திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று தனது ஸ்டைலில் எடப்பாடி திமுகவை தாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here