தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சி மாத்தி மாத்தி குறைய மட்டுமே சொல்லி வருகின்றனர்.
தமிழகம்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 12ம் தேதி முதல் துவங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நிலை இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை மக்களை கவரும் வண்ணத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மற்ற கட்சிகளை பற்றி தொடர்ந்து குறை கூறியும் வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து மாத்தி மாத்தி குறை கூறி வருகின்றனர். தொடக்கத்தில் விவசாய நகை கடன் மற்றும் மகளிர் சுயஉதவி குழு ஆகியவற்றை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் இவர் அறிவித்த சில தினங்களில் அதிமுக அரசு இதனை நிறைவேற்றியது. மேலும் இதுகுறித்து முதல்வர், திமுக அரசு அதிமுகவின் திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து செயல்படுகிது என்று குற்றம் சாட்டியது.
ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன் என்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். இது பல சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது இதனை சுட்டி காட்டிய தமிழக முதல்வர் அதிமுக அரசு விவசாயிகளுக்கு தோழனாக இருந்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு விவசாய நிலங்களை அளிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது என்று குற்றம் சாட்டினார்.
செவிலியர் கல்லூரியில் திடீர் தீ விபத்து – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
தேர்தல் நடக்கும் நேரத்தில் இப்படி தொடர்ந்து மாத்தி மாத்தி அவர்கள் செய்த குற்றத்தினை கூறி வருவதால் என்ன பயன். இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு தமிழக மக்கள் தான் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் இவர்கள் தொடர்ந்து குற்றத்தினை மட்டும் மாத்தி மாத்தி கூறி வந்தால் தமிழகத்தின் நிலை மோசமாக தான் செல்லும்.