தமிழகத்தில் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருவதால் இது குறித்து தற்போது தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையை கூட்டத்தை நடத்தி வருகிறார்.
தமிழகம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் தற்போதைய நேரங்களில் மக்களிடையே கொரோனா குறித்த பயம் குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை சுத்தமாக மறந்து விட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு காரணம் தான் என்ன?? பள்ளிகள் திறப்பா அல்லது தேர்தல் பிரச்சார கூட்டமா?
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏனெனில் தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை கொரோனா தாக்கி வருகிறது. இதனாலே தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் என செம பிசியாக இருந்து வருகின்றனர். இதில் கலந்துகொள்ளும் தொண்டர்களும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதனாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மாணவர்களின் பெற்றோர்களை குறிவைக்கும் கொரோனா?? பள்ளிகள் திறப்பு சரியான முடிவு தானா??
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் போடும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை குறைப்பதற்காக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வரப்போகிறதா என்பது இந்த கூட்டத்தின் முடிவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.