இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?? நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

0

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதனை அடுத்து நாளை பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்வில் சூழல் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. கொரோனா நோய் பாதிப்பினை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த இரு மாதங்கள் கொரோனாவின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் குறைந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான சுழலில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தாக்கம் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வந்தது. அதில் தமிழகமும் ஒன்று. மத்திய அரசு சார்பில் ஒரு பக்கம் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

ஆனாலும், தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியாக இருக்க தமிழகத்தில் பொது முடக்கத்தினை அமல்படுத்தலாமா என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது இப்படியாக இருக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்றும் ஏழைகளின் வாழ்கை சூழல் முக்கியம் என்றும் தெரிவித்திருந்தார்.

நாவூறும் சுவையுடன் “சிக்கன் லாலிபாப்” ரெசிபி – செஞ்சு அசத்துங்க!!

இதனை அடுத்து நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைய உள்ளது. கூட்டத்தொடரில் அமல்படுத்தப்பட இருக்கும் மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here