ஜாமீனில் வெளியே வந்து பாக்குற வேலையா இது..!! ராஜஸ்தானில் நிகழ்ந்த பயங்கரம்!!!

0

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு நபரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபருக்கு  சமீபத்தில் ஜாமீன் கிடைக்கவே ஜாமீனில் வெளிவந்து உள்ளார். இந்நிலையில் அவர் ஏற்கனவே வன்கொடுமை செய்த அதே சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து தப்பி சென்றுள்ளார்.

17 வயதே ஆன அந்த சின்ன சிறுமியை  இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த நபரை போலீஸ் கைது செய்தனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை  விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு  சிறையிலும் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அந்த நபர் மீண்டும் தன் வேலையை காட்டியுள்ளார்.

அதாவது, பாதிப்புக்குள்ளான அந்த சிறுமியை மீண்டும் ஒரு வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டு உள்ளார். மேலும் அந்த நபர் இந்த செயலில்  ஈடுபட்ட பிறகு தப்பிச் சென்று உள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் தான் பெற்ற பிள்ளையை காணாமல் தவிக்கவே போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சிறுமியை மீட்டு உள்ளனர். அதன் பிறகு  கர்தானி  காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது . தற்போது தப்பி ஓடிய அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here