புருஷன்.. பொண்டாடினா இப்படித்தான் இருக்கனும்.. மனைவிக்கு பங்கு தர பிடிக்காமல் தனது ரூ.5.8 கோடி வீட்டை எரித்த கணவன்!!!

0

தன் மனைவி விவாகரத்து வழங்கிய பிறகு, மனைவிக்கு சொத்தில் பங்கு தருவதை தவிர்க்க சுமார் 5.6 கோடி மதிப்புள்ள தனது வீட்டை கணவர் தீவைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரிட்டனில் ஜான் மேக் கிரோரி மற்றும் ஹிலாரி என்ற கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி சட்டப்படி பிரிந்துள்ளனர். ஜான் மேக் கிரோரிக்கு ரூ.5.6 கோடி மதிப்பிலான வீடு ஒன்று இருந்துள்ளது. இந்த வீட்டில் இவர்கள் இருவரும் சுமார் 20 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

 

விவகாரத்திற்கு பிறகு தன் மனைவிக்கு சொத்தில் பங்கு தர அந்த வீட்டை விற்க வேண்டும் என்ற சூழ்நிலை ஜான் மேக் கிரோரிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருடைய சொத்தில் விவாகரத்து வாங்கிய மனைவிக்கு பங்கு தர பிடிக்காமல் அந்த முழு வீட்டையும் தீ வைத்து எரித்துள்ளார்.அந்த வீடு முழுதாக எரிந்து முடியும் வரை அவர் தீயணைப்பு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவில்லை.

ஒழுங்காக இன்சூரன்ஸ் பிரீமியமும் செலுத்தாத காரணத்தினால் தற்போது இந்த பேரிழப்பை அவரால் ஈடுசெய்ய முடியவில்லை. தான் குடித்து விட்டு நிலை தடுமாறி இப்படி ஒரு செயலை செய்துவிட்டதாக போலீசாரிடம் ஜான் மேக் கிரோரி கூறியுள்ளார். தன் மனைவிக்கு சொத்தில் பங்கு தர விருப்பமில்லாமல் தன் சொத்தை முழுமையாக அழித்த கணவனின் செயல் கேட்போருக்கு எல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here