சமீபத்தில் பிரபல யூடியூர் டிடிஎப் வாசன் பைக் விபத்துக்குள்ளான நிலையில், 4 பிரிவுகளின் கீழ் போக்குவரத்து காவல்துறை அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், அவருடைய டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு தடை செய்தது மட்டுமின்றி, 45 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்கும் விதமாக தீர்ப்பு வழங்கி டிடிஎப் வாசனை வேதனை அடைய செய்தார்கள்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் சிறை வாசம் முடிந்து முன் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டு சென்றார்.இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.