இந்தியாவின் முக்கிய மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பன்றிக்காய்ச்சல்:
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் முழுவதுமாக கொரோனாவின் பிடியில் இருந்து விடுபடவில்லை.
சென்னையில் மழைநீர் தேங்கும் அபாயம்.., பொது மக்களை பாதுகாக்க மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை!!
இந்நிலையில் ஒரு மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் இருக்கும் சில பண்ணையில் மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது கிட்டத்தட்ட 276 பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் சாலசேரி, கரி மண்ணுர், தொடுபுழாவில் உள்ள பண்ணையை சுற்றி இருக்கும் பகுதிகளை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பன்றி காய்ச்சல் வந்த எல்லா பன்றிகளையும் எரித்து கொள்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.