இனி ஐ.பி.எல் போட்டிகள் எல்லாம் ஒளிபரப்ப முடியாது – தடை விதித்த தாலிபான்கள்!!

0
கோவிலை கலங்கப்படுத்திய மலையாள நடிகை - எல்லை மீறிய போட்டோஷூட்டால் அதிரடி கைது!!
இனி ஐ.பி.எல் போட்டிகள் எல்லாம் ஒளிபரப்ப முடியாது - தடை விதித்த தாலிபான்கள்!!

பெண் வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இனிமேல் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்புக்கு ஆப்கானில் தடை விதிப்பதாக தாலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

ஒளிபரப்புக்கு தடை:

ஆப்கான் நாட்டை தாலிபான் தீவிரவாதிகள் கடந்த சில தினங்களுக்கு முன் கைப்பற்றினர். இந்த நிலையில், இங்கு தற்காலிக அதிபர் மற்றும் அமைச்சர்களை கொண்டு இவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இங்குள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்போம் என தாலிபான்கள் உறுதி அளித்து இருந்தனர். ஆனால், பதவி ஏற்ற நாள் முதல் பெண்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து, குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி ஐ.பி.எல் போட்டிகள் எல்லாம் ஒளிபரப்ப முடியாது - தடை விதித்த தாலிபான்கள்!!
இனி ஐ.பி.எல் போட்டிகள் எல்லாம் ஒளிபரப்ப முடியாது – தடை விதித்த தாலிபான்கள்!!

இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர். பெண் வர்ணனையாளர்கள், பெண் பார்வையாளர்கள் இடம் பெற்றிருப்பதால் இந்த ஒளிபரப்புக்கு தடை விதிப்பதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here