ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இதில் 13 பேர் அமெரிக்க படையினரும் உயிர் இழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானே போர்க்களமாக மாறியுள்ளது. மக்கள் தாலிபான்களுக்கு அஞ்சி நடுங்கி வருகின்றனர். பலர் அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தின் அருகே திடீரென குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 90 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 13 அமெரிக்க படையினரும் அடங்குவர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க படைகள் உயிர் இழந்துள்ளதால் இதை எப்போதும் மறக்க மாட்டோம். தேடி வந்து வேட்டையாடி இதற்கான விலையை கொடுக்க வைப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்