ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வாக்குறுதியை உறுதி செய்துள்ளனர்
திட்டமிட்டபடி வெளியேற்றம்:
ஆப்கானிஸ்தானின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தலிபான் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 அன்று கைப்பற்றியதால் அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறி அமெரிக்காவில் குடியேற உள்ளதாக தகவல் பரவி வந்தது. மேலும் அவர் வெளியேறிய போது மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே, அதாவது போர் பதற்றத்தை தடுக்கவே நாட்டை விட்டு தாம் வெளியே செல்வதாக தம் செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து போர் முடிவுக்கு வருவதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், ஆப்கான் நாட்டில் பாதுகாப்பை உணராதவர்கள், பிற நாட்டு மக்களும் தங்களின் தூதரகங்கள் வாயிலாக அந்த நாட்டை விட்டு வெளியேற தினமும் காபூல் நகரின் விமான நிலையம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இதனை அடுத்து அமெரிக்காவை சேர்ந்த படைகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்தனர்.
இதனை ஏற்று அமெரிக்க படைகள் முழுமையாக ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அதாவது, 31ம் தேதிக்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என்று அறிவித்தனர். இதனை அடுத்து, ஆப்கான் நிலை குறித்து பேச உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர்கள் ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனை ஏற்க மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முடிவு செய்யப்பட்ட படி இந்த மாத இறுதியான ஆகஸ்ட் – 31க்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என அறிவித்தார். இதன் படி, அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானை விட்டு வெளியேறியது. கடைசி அமெரிக்க வீரர் ஆப்கான் மண்ணை விட்டு வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்