ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150 க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபான்கள் சிறைபிடித்துள்ளனர்.
அமெரிக்க படைகள் வெளியேறிய பின் தாலிபான்கள் முழு ஆப்கானிஸ்தான் நாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கான் நாட்டு மக்களும் அங்கிருந்து வெளியேறவே விரும்புகிறனர். இந்நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு அங்கு கேள்வி குறியாகியுள்ளது.
ஏற்கனவே இரண்டு விமானங்களில் இந்திய தூதர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ளனர். இன்னும் 400 இந்தியர்கள் அங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள 150 க்கும் மேற்பட்ட இந்தியர்களை காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்கள் சிறைபிடித்துள்ளனர். பிடிபட்ட இந்தியர்களை தாலிபான்கள் தாக்கி சித்ரவதை செய்வதாகவும் ஆப்கான் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்