ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என பெயர் மாற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்தது. தற்போது இந்த இரு பிரிவினருக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. போரின் முடிவில் தலைநகர் காபூல்லை தாலிபான்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.
இவ்வாறு நாட்டின் தலை நகரையே ஆக்கிரமித்து உள்ளதால் ஆப்கானிஸ்தானின் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரமும் தாலிபான்களின் கைவசம் தற்போது உள்ளது. இதை தொடந்து தாலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் பிரதமரான அஸ்ரப் காணிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை அடுத்து தாலிபான்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆப்கானிஸ்தான்னின் பெயரையும் தாலிபான்கள் மாற்றியுள்ளனர். அதாவது அந்நாட்டின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என தாலிபான்கள் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்