தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு பிறகு மே 8ம் தேதி வெளியிட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கத்தை விட அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுத உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய உரையாடல்களை பகிர்ந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி “நீட் தேர்வு என்பது இன்னொரு பரீட்சையே, இதனை அச்சப்படாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். உங்களுக்கான நாற்காலி எப்போதும் காத்து கொண்டிருக்கிறது. இதே நம்பிக்கையுடன் பொதுத்தேர்வு முடிவுகள் எதிர்நோக்கி இருங்கள்.
இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?? அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!
மேலும் மதிப்பெண் பட்டியலை பெற வரும் மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை கூறும் விதமாக “நான் முதல்வன்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இதன்மூலம் உயர்கல்வி படிப்பு மற்றும் அதற்குண்டான வேலைவாய்ப்புகளை ஆசிரியர்கள் எடுத்துரைப்பார்கள். எனவே நீட் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு முடிவுகளின் போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கான வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.” என தெரிவித்துள்ளார்.