அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் நடிகை அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கைதான மணிகண்டன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அப்பொழுதே பல குற்றசாட்டுகள்…
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசியலுக்கு வருவதற்கு முன் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார், பின் ராமநாதபுரம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக பதவியேற்றார். பின் நாளடைவில் கட்சியில் தொகுதியில் நன்றாக பணியாற்றியதால் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவி பெற்றார்.
அதன் பின் அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதிமுக கட்சியின் தலைமை அதனால் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. பின் நடந்து முடிந்த 2021 தேர்தலை போட்டியிட வாய்ப்பு கேட்டார் அவர்மீது உள்ள குற்றச்சாட்டால் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை அதிமுக. அவர்மீது அப்பொழுது இருந்தே பல குற்றசாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில் இப்பொழுது பாலியல் குற்றச்சாட்டும் அவர்மீது வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார்…
மலேசியாவைச் சேர்ந்த நடிகையும் மலேசியா நாட்டின் தூதரக அதிகாரியுமான சாந்தினி கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அமைச்சராக இருக்கும் போது எனக்கு பழக்கம் ஆனார், நாளடைவில் எங்களது நட்பு காதலாக மாறியது. பின் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். 2 வருடங்களாக நானும் அவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அப்பொழுது நான் மூன்று முறை கற்பாமாகிவிட்டேன். அவரிடம் கூறியதற்கு கருவை கலைக்க சொன்னார். நானும் அவரின் பேச்சை கேட்டு கலைத்திவிட்டேன்.
பின் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து மதுரை அண்ணா நகரில் உள்ள அவர் வீட்டில் வைத்து விசாரித்தனர் காவல்துறையினர்.பின் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் அப்பொழுது மணிகண்டன் எனக்கு சாந்தினி யார் என்று தெரியாது என்னிடம் இருந்து பணம் பறிக்க முற்படுகிறார், எனக்கும் சாந்தினிக்கும் சம்மந்தமில்லை என்று கூறினார், ஆனால் சாந்தினி புகார் அளிக்கும்போதே மணிகண்டனுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை சாட்சியாக சமர்ப்பித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் மணிகண்டன் சாந்தினி வீட்டிற்கு வந்து போனது சாந்தினி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளும் பதிவாகியிருந்தது. அதுவும் சாட்சியாக மாறியது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்..
இதற்கிடையில் இந்த வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின் அவரால் சாந்தினி பாதிக்கப்ட்டுள்ளதால் அவரை விசாரிக்க வேண்டியும் என்று உயர்நீதிமன்றம் அவரது மநுவ்வை தள்ளுபடி செய்தது. அதன்பின் மீண்டும் விசாரணைக்கு பின் பல கருத்துக்களை தெரிவித்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அவரின் ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதில் மணிகண்டன் 2 வாரங்கள் காவல்துறை முன் தினமும் நேர்ல சென்று கையெழுத்திட வேண்டும் மற்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிகண்டன் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்