தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையான அதிதி சங்கருக்கு வந்த பேராபத்து ஒன்று பாதியிலேயே நின்று போனதாக, கூறி அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ரசிகர்கள் நிம்மதி:
தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் அறிமுக நடிகையாக கால் பதித்து, தற்போது டாப் ஹீரோயினாக உயர்ந்திருப்பவர் நடிகை அதிதி சங்கர். தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது போக விளம்பரங்களிலும் நடித்து, தனக்கான மார்க்கெட்டை எகிற வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகா தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாக உள்ளதாக தகவல் கிளம்பியது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதுகுறித்து விளக்கம் அளித்த அவரது தந்தை ஆர்.கே.செல்வமணி, என் மகளுக்கு சினிமாவே பிடிக்காது, அவருக்கு தற்போது படிப்பே முக்கியம். அவரது வாழ்க்கை சமூக சேவை, சமூகப் பணி இது போன்ற பாதைகளில் போக உள்ளது. இதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என காட்டமாக பேசினார்.
இதை கேள்விப்பட்ட அதிதி ரசிகர்கள், ஒருவேளை அவர் சினிமாவுக்கு வந்திருந்தால், அதிதி இடம் பறிபோய் இருக்கும். நல்லவேளை அப்படியில்லாமல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது எனக்கூறி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
யார் சொன்னது? எங்களுக்கு விவாகரத்து ஆச்சுன்னு.,இப்பவும் எங்களுக்குள்ள லவ் இருக்கு – பிரபலம் அதிரடி!!