மாடலிங் துறையின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை யாஷிகா தற்போது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ளனர். தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு கியூட்டான ரீல்ஸ் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் அனைவர் மத்தியிலும் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த்
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில நடிகைகள் தான் நடிக்க முடிந்தது. ஆனால், தற்போது காலம் மாறி விட்டது. திறமை உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் திரைத்துறையில் நடித்து சாதிக்கலாம். அந்த வகையில் மிகவும் சிறிய வயதில் திரைத்துறையில் நுழைந்து அந்த வயதிலேயே பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமடைந்தவர் தான், நடிகை யாஷிகா ஆனந்த்.
வித்தியாசமான சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி – வைரலாகும் புகைப்படம்!!
இவர் முதன் முதலாக நடிகர் சந்தானத்துடன் “இனிமே இப்படித்தான்” திரைப்படத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படத்தில் இவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு முதன் முதலாக நடிகர் ஜீவாவின் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்திற்கு பின்பாக யாஷிகா படுக்கவர்ச்சிகரமாக இறங்கிவிட்டார். அவர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் முலமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் யாஷிகா தொடர்ந்து நடித்து வந்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த “பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் யாஷிகா அனைவரிடத்திலும் மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மதிப்பினை சம்பாரித்து கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மூலமாக அவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளது நன்றாக தெரிகிறது. அதே போல் இத்துடன் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றும் செய்துள்ளார். அதுவும் வைரலாக பரவி வருகின்றது.