நடிகை யாஷிகா ஆனந்த் போட்டோவை வைத்து ரசிகர்கள் செய்த காரியம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த்:
மாடலிங் மூலம் சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் தொடக்கத்தில் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, அடுத்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனது கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சொக்கி போக செய்தார். அதன் பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடியில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. சோசியல் மீடியா பக்கம் சென்றாலே அவரின் பெயரில் பல Fans பேஜ் இருக்கிறது. அந்த வகையில் ஒரு ரசிகர் செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ரசிகர் யாஷிகா ஆனந்த் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வருவது போல் இருக்கிறது.
கணவர் இறப்பிற்கு பிறகு மீண்டும் கதறிய நடிகை மீனா.., கண்கலங்க வைத்த பதிவு!!
மேலும் கையில் சூடம் ஏற்றி வழிபடுவது போல் இருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்த யாஷிகா ஆனந்த் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் ஒரு சாதாரண மனுசி தான், என் மேல் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள், இருப்பினும் என்னை கடவுள் போல நினைக்க தேவையில்லை. அன்பை மட்டும் பகிர்வோம். நமக்கு மேல இருக்கும் இறைவனை வணங்குவோம் என்று கூறியுள்ளார்.