
இந்திய சினிமாவில் பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார். ”போடா போடி” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் திரைக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நெகட்டிவ் ரோலை தேர்ந்தெடுத்து அசத்தலான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இவர் கொன்றால் பாவம் என்ற திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கான ஷூட்டிங் வெறும் 14 நாட்களிலேயே முடிந்து விட்டதாக இயக்குனர் தயாள் கூறியுள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் திரைக்கு வர உள்ளது. இந்த நேரத்தில் பேட்டியாளர் சந்திப்பில் இப்படகுழுவினருடன் வரலட்சுமி, சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோபத்தால் எதுவும் கிடைக்க போறது இல்ல.., இழப்பு தான் அதிகம்.., ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!!
அதில் சில வார்த்தைகள் பேசிய வரலட்சுமி ” பல நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளேன். ஒரு நல்ல படத்தில் நடித்ததற்காக மன நிறைவை இப்படம் எனக்கு கொடுத்துள்ளது. நான் இந்த சினிமாவுக்கு வரும்போது பின்புலமாக இருந்தது என்னுடைய அப்பா சரத்குமார் தான். ஆனால் அவர் எந்த ஒரு பின் புலனும் இல்லாமல் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என கூறி சரத்குமாரை புகழாரம் செய்துள்ளார்.