கோலிவுட் திரையில் ”போடா போடி” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை வரலக்ஷ்மி. இதை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் ”தாரை தப்பட்டை” படத்தில் நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை திரையுலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார். அடுத்தடுத்து பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் இவர் தற்போது பாலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இவர் நடித்துள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற திரைப்படம் அண்மையில் OTT திரையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படக்குழுவுடன் இவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் இவர் கூறியிருப்பதாவது, இவரின் பின் பகுதியில் ஒருவர் அடித்து, misbehave செய்துள்ளாராம்.
யாரு சொன்னா? ஆஷிஷ் என்னை ஏமாற்றினாருனு? .., பேட்டியில் மனம் திறந்து பேசிய முன்னாள் மனைவி!!
இதனால் ஆத்திரமடைந்த இவர் அந்த நபரை விரட்டிச் சென்று, அடித்து அவரது கண் கண்ணாடியை உடைத்து விட்டாராம். இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு அந்த நபரை அடித்துள்ளாராம். மேலும் இவர் அடித்த அடியில், அந்த நபர் இனி எந்த பெண்ணை மட்டுமல்ல அவரது மனைவியை கூட தொட பயப்படுவார் என கூறியுள்ளார்.