நடிகை வனிதா விஜயகுமார் தனது சொந்த வாழ்க்கை மற்றும் மூன்றாம் திருமணம் குறித்து, உருக்கமான பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வனிதா உருக்கம் :
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை வனிதா விஜயகுமார். திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்த இவர், தேவையற்ற திருமண சிக்கல்களில் சிக்கித் தவித்து படாத பாடுபட்டார். மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை, திருமணம் செய்து கொண்ட இவர் சில காரணங்களால் அவரை விட்டு பாதியிலேயே பிரிந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, தன் 3 ம் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார். அதாவது சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் போன்றவற்றில் பீட்டர் பால் அடிமையாக இருந்தார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வர எவ்வளவோ பாடுபட்டேன்.
ஆனால் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. இவ்வளவு நடந்த பிறகும், அவருடன் எப்படி என்னால் வாழ முடியும். இந்த மாதிரி சென்டிமென்ட் விசயத்தில் நான் ரொம்ப வீக், அதனாலதான் எல்லாரும் என்னை ஈஸியா ஏமாத்திடுவாங்க எனக் கூறி கதறி அழுதார். இவரின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.