பிரபல நடிகையான வனிதா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் வனிதா. இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது வந்தாலும் அதை எதையுமே கண்டு கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன் வனிதாவின் கணவர் பீட்டர் பால் உடல்நிலை குறைவால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
ஏற்கனவே வனிதாவுக்கு இரண்டு திருமணம் முடிந்து டைவர்ஸ் ஆன நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் தான் பீட்டர் பால் இறப்பு செய்தி வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
காட்டுறவிதத்துல காட்டி இளசுகளை இடுப்பு மடிப்புல மடிச்சு போட்ட ரகுல்.., சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!
ஆனால் தற்போது வனிதா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீட்டர் பால் இறந்ததை தொடர்ந்து அனைவரும் வனிதாவின் கணவர் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஆனால் இதை மறுக்கும் விதமாக வனிதா எனக்கும் பீட்டர் பாலுக்கும் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை.
“நான் அவருடைய மனைவியும் இல்லை. அவர் என்னுடைய கணவரும் இல்லை” நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் தான் இருந்தோம். இதனால் சமூக வலைதளத்தில் யாரும் என்னுடைய கணவர் இறந்து விட்டதாக செய்தி பரப்ப வேண்டாம் எனக் கூறி சோசியல் மீடியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
View this post on Instagram