நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை திரிஷா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, கில்லி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா சென்ற திரிஷா, அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை தொடர்ந்து சுற்றுலா சென்ற போது அவர் காலில் காயம் இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவலையடைய செய்தது. தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தனுஷோட தம்பியா இது?? ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் இப்படி ஒரு சமந்தமா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
அதில் ” திரிஷாவின் கால் வீங்கி இருப்பது போல் புகைப்படத்தில் அமைந்திருந்தது. மேலும் அதற்கு கேப்ஷனாக “இனிமேல் காலில் காயம் ஏற்பட்டால், உங்களுடைய வெற்றி விழாக்களாக இருந்தாலும் நடனமாடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.