நிச்சயதார்த்தம் முடித்தவருடன் நடிகை திரிஷா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை திரிஷா:
சினிமா துறையில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை திரிஷா. அவரின் அழகாலும் எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வந்தார். மேலும் தொடர்ந்து வெற்றி படங்களை தந்ததால், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை திரிஷாவுக்கு சில ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் திணறி வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். இந்த நிலையில் நடிகை திரிஷாவின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது 2015ம் ஆண்டு மிகப்பெரிய தொழிலதிபர் ஆன வருண் மணியன் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சஞ்சீவுக்கு எதிராக திரும்ப இருக்கும் ஆலியா மானசா – ஐயயோ.., எப்படி இருந்த ஜோடி இப்படி ஆகிட்டாங்களே!!
ஆனால் சில பல காரணத்தினால் அது நிச்சயதார்த்ததோடு நிறுத்தி கொண்டனர். அவருடன் சேர்ந்து இருக்கும் திரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் 39 வயதை கடந்த அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.