தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோலிவுட்டில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அண்மையில் கூட மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ”பொன்னியின் செல்வன்” படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்போது திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ”ராங்கி” திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பேட்டியாளர்களை சந்தித்து பேசிய திரிஷாவிடம் அஜித், விஜய் இதில் யார் NO 1 என்ற கேள்வியை கேட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பெரிய நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.
அவர் கண்ட்ரோலையே இல்ல.., நாற்காலியில் தடுமாறிய கேப்டன் விஜயகாந்த்.., அதிர்ச்சியில் மக்கள்!!
நான் எப்படி இவர்களில் யார் பெரிய நடிகர் என்று சொல்ல முடியும். இங்கு ஒரு நடிகரின் படம் நல்ல வரவேற்பை பெற்றால் அவர் NO 1 என்று கருதப்படுவார். அதுவே அவரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அவர் இடத்தில் மற்றொருவர் வந்துவிடுவார். இதில் யார் NO1 என்று சொல்ல எதுவும் இல்லை என கூறியுள்ளார். திரிஷாவின் பதிவு இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.