மன நிம்மதிக்காக ஆன்மிகத்தை நாடும் நடிகை தமன்னா – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

0

நடிகை தமன்னா தற்போது தனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கோவில்களுக்கு சென்று வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்டபோது பெற்றோருடன் ஆன்மிக பயணமாக கோவில்களுக்கு செல்வது மனதிற்கு நிம்மதியை தருகிறது என்று கூறியுள்ளார். மேலும் இது சம்மந்தப்பட்ட போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை தமன்னா:

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பின்னர் ஆனந்த தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா, பையா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழில் காத்து கருப்பு, மற்றும் தெலுங்கில் எஃப் 3, தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் எல்லாம் தமன்னா ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, முன்பெல்லாம் விடுமுறையை கிடைத்தால் வெளிநாடுகளுக்கு சென்று விடுவேன். ஆனால் இப்போது கோவில்களுக்கு செல்வது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது என்றும், எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் சாமியை தரிசனம் செய்வதுடன் தியானத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இது எனது மனதை லேசாக மாறி வருகிறது. ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள் என்பதால் ஒரு மாத பயணமாக பல்வேறு கோயில்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here