முன்னணி நடிகை தமன்னா நடித்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகிற 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளரை சந்தித்த நடிகை தமன்னா பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா:
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
அந்த வரிசையில் கல்லூரி, படிக்காதவன், அயன், வீரம் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. தற்போது வெளியாக இருக்கும் இந்தி படமான பப்ளி பவுன்சர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பாடி பில்டராக இருந்த சாதாரண பெண் பவுன்சராக மாறிய பின் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அண்மையில் நடந்த பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், ” படத்துல வர பவுன்சர் கதாபாத்திரம் மாதிரி ரியலில் இருக்கணும்னு நினைச்சா யார் கிட்ட பவுன்சராக இருப்பீங்க ” என்று கேட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கு “சற்றும் சிந்திக்காமல் கேட்ட நொடியே ஹிருத்திக் ரோஷனுக்கு பவுன்சராக இருப்பேன் என்று கூறியுள்ளார். அடுத்த நிமிடம் என்ன ஆச்சுன்னு தெரியல, பாலிவுட் நடிகர் விக்கி கவுசலுக்கும் பவுன்சராக இருக்கவும் ஆசை ” என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.