தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் நடித்த நடிகை சுரபி தயாரிப்பாளரிகளிடம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் வேற நடிகைகளை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சுரபி
தமிழில் தனது முதல் படத்தில் இருந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான், நடிகை சுரபி. தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகின் மூலமாக முதல் படத்திலேயே தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தினை அமைத்து கொண்டவர் தான் சுரபி. அதே போல் தமிழ் திரையுலகில் அடுத்த முன்னணி நடிகையாக இவர் உருவெடுப்பார் என்று பயங்கரமாக உசுப்பேத்தி விடப்பட்டார்.
இதன் காரணமாக அப்போது சுரபி தனக்கு வந்த அனைத்து வாய்ப்புகளையும் இவர் தவிர்த்துள்ளார். அதே போல், தான் இன்னும் பெரிய நடிகை கிடையாது என்பதனை உணராமல் முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டார். இதனால் தான் இவர் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
இதே நிலை தான் தெலுங்கிலும் இவருக்கு. இப்படியான சூழலில் நடிகை சுரபியை ஒரு தயாரிப்பாளர் அணுகி உள்ளார். கூடுதலாக, அவர் இது கமர்சியல் திரைப்படம் என்பதால் அந்த திரைப்படத்தில் கொஞ்சம் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு கொதித்து போன சுரபி எத்தனை கோடி கொடுத்தாலும் நான் இது போன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
என்ன கீர்த்தி இப்படி ஓடுறிங்க – பரிதவித்து போன ரசிகர்கள்!!
இதனை அடுத்து உங்களுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியினை வேறு ஒருவருக்கு கொடுத்தால் அவர்கள் அழகாக நடித்து கொடுத்துவிட்டு போய் விடுவர் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.